டேவிட்.டி.பக்: படைப்பின் மீதான காதலன்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்பது குறள். குறள் குறித்த பெருமிதம் என்பது வேறு தமிழர்கள் அதைப் படிப்பது அல்லது பின்பற்றுவது என்பது வேறு. ஆனால் இங்கே கூறப்பட்ட குறளின் வரி மிகவும் சிறப்பானது. அன்பை யாராலும் அடைக்கமுடியாது அதற்கான தாழ்ப்பாள்களை இதுவரை யாரும் உருவாக்கவில்லை. அப்படிப்பட்ட அன்பின் இருப்பிடமாகத்தான் வந்தார் திரு. டேவிட்.டி.பக் அவர்கள். டேவிட் அமெரிக்காவின் கெண்டிகா பகுதியைச் சார்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியாவில் ஒருகாலத்தில் தமிழகத்தில் வசித்து வந்ததால் தமிழோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. [...]

வலித்தல்

அயர்ந்து தொங்கும் கிளையின் மீதொரு கூடு. வானை தன்னுள் வைத்து பாதுகாக்கிறது. கிளையின் நெய்தலில் கையாளப்பட்ட நுட்பம் கலைக்க காற்று மிகைகிறது. அடிமானத்தின் பள்ளத்தில் நீர் சேரசேர அது தனக்கானதை உறிஞ்சி கொடுக்கின்றது. மேகங்கள் வளரும் இடம் இப்போது கூடு. கூட்டைப் பற்றி கவலைப்படும் நீங்கள் கண்டிப்பாக அடுத்த கோடையில் வரும் மழையை தரிசிக்கலாம்

Follow

Get every new post delivered to your Inbox.